வால்பாறையில் குறுத்தோலை ஞாயிறு தின விழா - குறுத்தோலை ஏந்தி பவனி வந்த கிறிஸ்தவர்கள்!

குறுத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி வால்பாறையில் உள்ள பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள், கையில் குறுத்தோலை ஏந்தி, ஒசானா பாடல் பாடியபடி பவனி வந்தனர். கல்லூரி வளாகம் அருகே தொடங்கிய ஊர்வலம், சி.எஸ்.ஐ ஆலயத்தில் நிறைவடந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறை அருகே குறுத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குறுத்தோலை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

உலகம் முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்களால் இன்று குறுத்தோலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம் வால்பாறையிலும் கிறிஸ்தவர்களால் குறுத்தோலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்பட்டது.



அதன்படி வால்பாறையிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் சி.எஸ்.ஐ மறை மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் இணைந்து கல்லூரி வளாகம் அருகே தங்களது குறுத்தோலை பவனியை தொடங்கினர்.



கையில் குறுத்தோலையை ஏந்தியபடி ஒசானா பாடல் மற்றும் இயேசுவின் தாசனே என்ற பாடலை பாடி பவனியாக சி.எஸ்.ஐ ஆலயம் வளாகம் வந்தனர். இதனையடுத்து, ஆலய ஆயர் பால் சுந்தர் சிங் தலைமையில் விசேஷ பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் வால்பாறை இருதய ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் ஆகியோர் தலைமையில், விசேஷ பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் பவனியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக இருதய ஆலயத்தை அடைந்து குறுத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது.



இதேபோல வால்பாறை அடுத்துள்ள முடிஸ் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்கு தந்தை மரிய ஆன்டணி தலைமையிலும் குறுத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...