ஈஷா மையத்திற்கு வரும் மோடியை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஈஷா யோகா மையத்தின் மீதும், ஈஷாவின் ஆதியோகி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி மீதும் அவதூறு பரப்பி எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் 112 அடி ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி நாளை கோவை வரவுள்ளார்.

இதனிடையே, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈஷா யோகா மையத்தின் மீதும், மோடியின் மீதும் எதிர்ப்பு தெரிவித்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர். 



இவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. காருண்யா நிறுவனத்தின் பின்னணியும், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் தூண்டுதல் பேரில் மதரீதியான பதட்டத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள், சவுக்கு, வினவு உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, ஈஷாவிற்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக நடைபெற்று வரும் அவதூறு பிரச்சாரங்களை கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...