பணமோசடி புகாரை, வாய்த்தகராறு என வழக்குப்பதிவு செய்து அலைக்கழிப்பு - கோவை ஆட்சியரிடம் இளம்பெண் புகார்!

கோவை கவுண்டம்பாளையம் அருகே ரூ.45 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு கட்டிட பணியை முடிக்காமல் இழுத்தடித்து வந்த கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவன உரிமையாளர் மீது அளித்த புகாரை வாய்த்தகராறு என பதிவு செய்து துடியலூர் போலீசார் அலைக்கழித்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிருந்தா என்பவர் மனு அளித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் காவல்துறையினர், புகாரை தவறாக பதிவு செய்து அலைக்கழித்ததாக இளம்பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிருந்தா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நல்லம்பாளையம் பகுதியில் உள்ள தனது சொந்த நிலத்தில் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் பணியை தொடங்கியுள்ளார். இதற்காக சூலூர் பகுதியை சேர்ந்த அசோக் குமார் என்பவரை கட்டிடம் கட்ட நியமித்துள்ளார்.

இந்நிலையில், அசோக்குமார் என்பவர் உப்பிலிப்பாளையம் பகுதியில் ஒரு கன்ஸ்டிரக்ஷன் நிறுவனம் நடத்தி வருகிறார். நல்லாம்பாளையத்தில் கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் பிருந்தாவின் தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து அசோக் குமார் கட்டிடம் கட்டுவதை இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

தற்போது வரை சுமார் 45 லட்சம் ரூபாய் அவரிடம் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் கட்டிட பணிகளை முடிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதுகுறித்து துடியலூர் காவல் நிலையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

ஆனால் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிருந்தா, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் பிருந்தா கூறியதாவது,

புகார் அளிக்கப்பட்டு சுமார் 2ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இதற்கு காவல் நிலையம் மூலமாக, தீர்வு காண இயலாது. நீதிமன்றத்தின் வாயிலாக மட்டுமே தீர்வு காண முடியும் போலீசார் தற்போது கூறுகின்றனர்.

இதனை முன்பே தெரிவித்து இருந்தால் நான் இத்தனை நாட்களாக அலைந்து இருக்க வேண்டியது இல்லை. இடைப்பட்ட இந்த நாட்களில் தன்னை விசாரணைக்காக அழைத்து விட்டு, தங்களதுகட்டிடத்தில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றனர்.

மேலும் பண மோசடி குறித்தான இந்த புகாரை வாய் தகராறு என பதிவு செய்துள்ளனர்.மாவட்ட ஆட்சியர் தனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...