கோவையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது - 4 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை சூலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த கணேசன் மற்றும் சுப்ரமணியன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: நீலாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தனிப்படை அமைக்கப்பட்டு ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணிகளிலும் கோலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் நீலாம்பூர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர்.



அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கணேசன் (36) மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் (40) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தபோது, ஆட்டோ மற்றும் பைக் மூலம் கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ரூ.18,200 ரொக்கம், ஆட்டோ, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...