அனுப்பட்டி இரும்பு உருக்கு ஆலை குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்..! - பல்லடம் எம்.எல்.ஏ தகவல்!

பல்லடம் அருகே அனுப்பட்டியில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக 18வது நாளாக தொடரும் கிராம மக்களின் போராட்டம் குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம். ஆனந்தன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: அனுப்பட்டி இரும்பு உருக்காலை விவகாரம் குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம். ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்காலைக்கு எதிராக அப்பகுதி கிராம மக்கள் 18 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், கால்நடை வளர்ப்பு, விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், பொது மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.



இதன் காரணமாக ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று 18 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுக்கு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பட்டி கிராம மக்கள் இந்த ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் இரும்பு உருக்கு ஆலையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளேன். நடப்பு சட்டப்பேரவையில் ஆலையால் ஏற்படும் பிரச்சனை குறித்தும், கிராம மக்களின் போராட்டம் குறித்தும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தீர்மானத்தை கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...