தொழிலுக்கு இடையூறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை.! - போசியா அமைப்பு வலியுறுத்தல்

முறையான ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் வடமாநிலங்களிலிருந்து பொருட்களை கோவைக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் முறையாக தொழில் செய்பவர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி தருவது ஏற்புடையதல்ல என்று போசியா அமைப்பு கண்டித்துள்ளது.


கோவை: நவ இந்தியா பகுதியில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா’ நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

கோவை நவ இந்தியா பகுதியில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா’ நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.



இதில் ‘போசியா’ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், சிவசண்முககுமார், சுருளிவேல் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தில், ஜிஎஸ்டி மூலம் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து தொழில்துறையினர் சார்பில், மத்திய அரசிடம் எடுத்துக் கூறியும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குறு, சிறு தொழில்கள் முடங்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு அதிகாரிகள் மாநில ஜிஎஸ்டி செலுத்துவது தொடர்பாக குறு, சிறு தொழில்முனைவோர் மத்தியில் உள்ள சிறு குறைகளை கண்டறிவதும் அதற்காக பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் தொடங்கியுள்ளனர்.



இந்நடவடிக்கை தொழில்முனைவோர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையாக தொழில் செய்து வரும் நிலையில், அவற்றை முடக்கும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

முறையான ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் வடமாநிலங்களிலிருந்து ஏராளமான பொருட்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டு வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் முறையாக தொழில்முனைவோருக்கு நெருக்கடி தருவது ஏற்புடையதல்ல.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் துறை சார்ந்த உயரதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...