கோவையில் தனியார் நிறுவனத்தில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான மெத்தை, சோபாக்கள் எரிந்து சேதம்!

கோவை அறிவொளிநகரில் தனியார் மெத்தை மற்றும் சோபா உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கோவைப்புதூர் அடுத்த அறிவொளிநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெத்தை மற்றும் சோபா உற்பத்தி நிறுவனத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதைக்கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, கோவைப்புதூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



இருப்பினும், மளமளவெனப் பரவிய தீ கம்பனி முழுவதும் பற்றியதால் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீவிபத்து குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விபத்தின்போது ஊழியர்கள் யாரும் நிறுவனத்திற்குள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...