உடுமலையில் புதிய தமிழகம் கட்சி பொதுக்கூட்டம் - டாக்டர். கிருஷ்ணசாமி பங்கேற்பு!

உடுமலையில் நடந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அவருக்கு பள்ளிகளில் பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.



புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியின் பிறந்தநாளையொட்டி, அக்கட்சியின் சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்று டாக்டர்.கிருஷ்ணசாமி பேசுகையில்,



ஒவ்வொருவர் வாழ்விலும் குருவாக, வழிகாட்டியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் இல்லை என்றால் யாரும் வாழ்வில் முன்னேற முடியாது. உடுமலையில் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னுடைய நீண்ட நாள் ஆசையான ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவாக இங்கு கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் மது ஒழிக்க வேண்டும் என பலமுறை ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. மதுவால் எண்ணற்ற இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். ஆகையால் மதுவை ஒழிக்க அறப்போராட்டம் நடத்தவேண்டிய சூழ்நிலை உருவாகி வருகின்றது என்றார்.



இந்த, குடிமங்கலம் பூளவாடி, உட்பட அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகளை அவர் வழங்கினார்.



பொதுக்கூட்டத்தில் நிறைவில், மது ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.



மேலும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி-க்கு பாடம் சொல்லிக் கொடுத்த மூன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.



இந்த கூட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்துார் சட கோப ராமானுஜ ஜீயர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், பா.ஜ.பொதுசெயலாளர் முருகானந்தம், முன்னாள் எம் எல்.ஏ., தனியரசு, விஸ் கர்மாஜகத்குரு பாபுஜி சுவாமிகள் மற்றும் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தமிழ்மணி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...