திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக்கியதால் சக்கரம் ஏறி இறங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tiruppur: திருப்பூரைச் சேர்ந்த சூர்யா (23) என்பவர் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில், அவருக்கு அரசு பேருந்தில் தற்காலிக நடத்துனராக பணி கிடைத்துள்ளது.



இன்று அதிகாலை 4 மணிக்கு தொரவலூர் செல்லும் அரசு பேருந்தில் பணியில் சேர வேண்டியிருந்ததால், இரவே பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது முன்பு பணியாற்றிய தனியார் பேருந்து நிறுவனத்தின் மினி பேருந்து அங்கு நிற்பதை கண்டு, அதன் முன்பாக துண்டு விரித்து படுத்து உறங்கியுள்ளார்.

இந்நிலையில், அதிகாலை 3.30 மணியளவில் வந்த தனியார் பேருந்து ஓட்டுனர், பேருந்தை பயணிகள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்ல இயக்கியபோது, பேருந்தின் முன்பாக படுத்திருந்த சூர்யாவை கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்தின் சக்கரம் சூர்யா மீது ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயது நடத்துனர் ஒருவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...