திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக்கியதால் சக்கரம் ஏறி இறங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tiruppur: திருப்பூரைச் சேர்ந்த சூர்யா (23) என்பவர் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில், அவருக்கு அரசு பேருந்தில் தற்காலிக நடத்துனராக பணி கிடைத்துள்ளது.



இன்று அதிகாலை 4 மணிக்கு தொரவலூர் செல்லும் அரசு பேருந்தில் பணியில் சேர வேண்டியிருந்ததால், இரவே பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது முன்பு பணியாற்றிய தனியார் பேருந்து நிறுவனத்தின் மினி பேருந்து அங்கு நிற்பதை கண்டு, அதன் முன்பாக துண்டு விரித்து படுத்து உறங்கியுள்ளார்.

இந்நிலையில், அதிகாலை 3.30 மணியளவில் வந்த தனியார் பேருந்து ஓட்டுனர், பேருந்தை பயணிகள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்ல இயக்கியபோது, பேருந்தின் முன்பாக படுத்திருந்த சூர்யாவை கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்தின் சக்கரம் சூர்யா மீது ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயது நடத்துனர் ஒருவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...