தாராபுரத்தில் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள மாநில தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் திருப்பூர் மாவட்ட சங்கம் சார்பில் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதற்கு மாவட்ட தலைவர் இளங்கோ ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஷா, மாவட்ட பொருளாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பணி வரன்முறை மற்றும் பதவி உயர்வினை தாமதம் இன்றி வழங்க வேண்டும். விற்பனையாளருக்கு ஊதிய உயர்வு மற்றும் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்.



அண்டை மாநிலமான கேரளாவில் தொடக்க கடன் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குவதைபோல தமிழ்நாட்டிலும் இதனை தமிழ்நாடுஅரசு நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.



இதில், மாவட்டம், தாலுகா அளவிலான கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...