காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைத்திடுக..! - தாராபுரத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ. 5 லட்சமாகவும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமாகவும் உயர்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை தலைவர் கே.ரத்தினம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் என்.பத்மா, மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்தோடு இணைத்து சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்தவேண்டும்.

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ. 5 லட்சமாகவும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமாகவும் உயர்த்தி வழங்கவேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதிம் ரூ. 9 ஆயிரம் வழங்கவேண்டும்.



சிறப்பு காலமுறை ஊதியத்தை நீக்கி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் கே.செந்தில்குமார், நிர்வாகி மணிமொழி மற்றும் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் சந்திரலேகா, சுஜாதா, செல்வம், புஷ்பா, ஆனந்தி, வசந்தாமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...