அவிநாசி அருகே கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழா - நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெளர்ணமியை முன்னிட்டு தீமிதி மற்றும் தேர்திருவிழா நடைபெற்றது. அதிகாலை 4மணி முதல் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருப்பூர்: அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெளர்ணமியை முன்னிட்டு தீமிதி விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெருமாநல்லூரில் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமியன்று குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வந்தது.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று விடியற்காலையில் 4 மணிக்கு தொடங்கியது.



பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி என்று பக்தி கோஷம் முழங்க' குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



இந்த வருட திருவிழாவில் உள்ளூர் மட்டுமல்லாதுஅவிநாசி, கோபி,சத்தியமங்கலம், ஈரோடு, அந்தியூர், தாராபுரம், மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து சுமார் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் வடம் பிடித்து இழக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...