அவிநாசி அருகே கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழா - நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெளர்ணமியை முன்னிட்டு தீமிதி மற்றும் தேர்திருவிழா நடைபெற்றது. அதிகாலை 4மணி முதல் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருப்பூர்: அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெளர்ணமியை முன்னிட்டு தீமிதி விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெருமாநல்லூரில் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமியன்று குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வந்தது.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று விடியற்காலையில் 4 மணிக்கு தொடங்கியது.



பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி என்று பக்தி கோஷம் முழங்க' குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



இந்த வருட திருவிழாவில் உள்ளூர் மட்டுமல்லாதுஅவிநாசி, கோபி,சத்தியமங்கலம், ஈரோடு, அந்தியூர், தாராபுரம், மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து சுமார் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் வடம் பிடித்து இழக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...