கோவை மாநகரில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


கோவை: கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதில் சில இடங்களில் மிதமான மழையும், பல இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.



குறிப்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி, ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக மாநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை துவங்கும் சில விநாடிகள் மட்டும் மிகச்சிறிய அளவிலான ஆலங்கட்டி மழை பெய்ததால், அப்பகுதி மக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...