கோவை மாநகரில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


கோவை: கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதில் சில இடங்களில் மிதமான மழையும், பல இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.



குறிப்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி, ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக மாநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை துவங்கும் சில விநாடிகள் மட்டும் மிகச்சிறிய அளவிலான ஆலங்கட்டி மழை பெய்ததால், அப்பகுதி மக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...