தாராபுரம் அருகே மாணவியிடன் செயின் பறிப்பு - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

தாராபுரம் அருகே தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த சிவகுமார் மகள் கீர்த்தனா, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தாராபுரத்திற்கு பேருந்தில் பயணித்த போது, முக கவசம் அணிந்த பெண்கள் செயினை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் நூதன முறையில் பெண்கள் செயினை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அருகேயுள்ள தளவாய்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் கீர்த்தனா. கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவ தினத்தன்று தளவாய் பட்டணத்திலிருந்து தாராபுரம் செல்ல தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்தார்.



பேருந்தில் பயணிகள் அதிகம் இருந்ததால், மாணவி கீர்த்தனாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை நோட்டமிட்ட முக கவசம் அணிந்திருந்த இரண்டு பெண்கள் நைசாக கூட்டத்தில் நெரிசலை பயன்படுத்தி கழுத்திலிருந்த தங்கச் செயினை பறித்துள்ளனர்.

இந்நிலையில் தாராபுரம் பேருந்து நிலையம் வந்து இறங்கிய மாணவி கீர்த்தனா தனது கழுத்திலிருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள இரண்டு சவரன் தங்கச் சங்கிலி காணவில்லை என்று பதறி அடித்து பேருந்து நடத்துநரிடம் சென்று தகவலை கூறினார்.



உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேருந்திலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது கருப்பு மற்றும் வெள்ளை நிற சால்களை அணிந்த இரண்டு பெண்களில் கருப்பு நிற முககவசம் அணிந்த பெண் மாணவி கீர்த்தனாவின் கழுத்திலிருந்த தங்கச் செயினை திருடுவது, பதிவாகி இருந்தது.

சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்துப் பெண்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...