பல்வேறு தலைப்புகளின் ஆய்வு முடிவுகளை கோவை ஆட்சியரிடம் சமர்பித்த மாணவர்கள்!

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் {District Collectors Internship:Programme) தேர்வு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தலைப்பின்கீழ் ஆய்வுகளின் முடிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் சமர்பித்தனர்.


கோவை: பல்வேறு தலைப்புகளின் கீழ் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் முன்னிலையில் மாணவர்கள் சமர்பித்தனர்.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணைமுதல்வர் நஞ்சன்பால், ரோட்டரி டெக்ஸ்சிட்டி தலைவர் விஜய் ராமாந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டம் என்பது கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், இளம் ஆர்வர்கள் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளில் தாங்களாகவே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் குறுகிய கால பயிற்சியானது அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 45 நாட்களும், நீண்டகால பயிற்சியானது இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 6 மாதங்களும் வழங்கப்படும்.



மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் குறுகிய கால பயிற்சியில் 24 மாணவர்களும், நீண்டகால பயிற்சியில் 6 மாணவர்களும் தேர்வு பெற்றனர். குறுகிய கால பயிற்சியில் தேர்வு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் காலை உணவுத்திட்டம், இ.சேவை மையம், திடக்கழிவு மேலாண்மை, ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட தலைப்புகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சமர்பித்தனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...