உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - பக்தர்கள் வழிபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கம்பம் போடுதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் கம்பம் போடுதல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.



உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. வருகின்ற 13ஆம் தேதி தேர்திருவிழா நடைபெற உள்ள நிலையில் இன்று பேருந்து நிலையம் அருகில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் உள்ள கிணற்று நிரில் இரண்டு நாள் ஊறவைத்த அரச மரத்தாலான மூன்று கிளைகள் கொண்ட கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.



மேலும் பக்தி முழக்கங்கள முழுங்க கும்பங்கள் அணிவகுத்து செல்ல மேளதாளத்துடன் பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டு நடப்பட்டது . பின்னர் கோவிலை மூன்று முறை பூவோடு எடுத்து சுற்றிவந்து பூஜைகள் நடத்தப்பட்டன.



பூஜைகளுக்கு பின் திருக்கம்பத்துக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் திருக்கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...