உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது பாஜக சார்பில் புகார்!

உடுமலை கபூர் கான் வீதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக விரிவாக்க பணிக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தி ஆட்சியர், நகராட்சி மற்றும் எஸ்.பி அலுவலகங்களில் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக விரிவாக்க பணிக்கு தடை விதிக்க கோரி பாஜக சார்பில் ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கபூர் கான் வீதியில் இந்திய கம்யூனிஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இந்த கட்சி அலுவலகம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையும், நகராட்சியும் இணைந்து புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் தற்பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, நகராட்சி ஆணையரும், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளரும் நடவடிக்கை எடுக்காததால் ஏற்கனவே காலி செய்யப்பட்ட இடங்களில் மீண்டும் சட்ட விரோத கடைகள் கட்டடங்கள் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், உடனடியாக தற்பொழுது கட்டப்பட்டு வரும் கட்டடத்தை கட்ட தடை விதித்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் பாஜக சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தபடும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கட்டிடம் கட்டுவது சட்டவிரோதமாகும்.



எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் பாஜகவினர் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.



இதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், திருப்பூர் நகராட்சி மண்டல அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் ஆய்வாளர் அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் பாஜக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...