சென்னையில் குளத்தில் மூழ்கி அர்ச்சகர்கள் உயிரிழப்பு - முதல்வர் நிவராணம் வழங்க உத்தரவு

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் உள்ள தருமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டும் நிகழ்வின்போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு நிதியுதவியும் அறிவித்துள்ளார்.


சென்னை: சென்னை மூவரசம்பட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பங்குனி உத்திர நாளை முன்னிட்டு சென்னை. மூவரசம்பட்டு பகுதி கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வின் போது, குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.



அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், குளத்தில் மூழ்கி உயிரிழந்த அர்ச்சகர்கள் குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பரசன் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...