உடுமலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்!

உடுமலை நகரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், அவற்றை அகற்றக் கோரி, காவல் துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் உத்தரவிட்டதை தொடர்ந்து பதாகைகள் அகற்றப்பட்டது.


திருப்பூர்: உடுமலை நகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தேர்த்திருவிழாவையொட்டி குட்டை திடல், தளி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையில் நெருக்கமாக அமைக்கப்பட்ட இந்த விளம்பரப் பதாகைகளால் விபத்துகள் ஏற்படும் நிலை இருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் ஏற்கனவே உள்ள நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, அனைத்து விளம்பரப் பதாகைகளையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.



இதனையடுத்து விளம்பரப் பதாகைகளை தாங்களாகவே முன் வந்து அகற்றினர்.

இதுகுறித்து விளம்பரப் பதாகை அமைப்பாளர்கள் கூறுகையில், திருவிழா போன்ற முக்கிய நாட்களில் தான் ஓரளவு வருவாய் ஈட்ட முடியும். முழுமையாக அனைத்து பதாகைகளையும் அகற்றக் கூறியதால் பல நிறுவனங்களிடம் பணம் பெற முடியாத நிலை ஏற்படும். இதனால் கடும் இழப்பை சந்தித்துள்ளோம். குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவுகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாதுகாப்பான முறையில் விளம்பரப் பதாகைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...