உடுமலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்!

உடுமலை நகரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், அவற்றை அகற்றக் கோரி, காவல் துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் உத்தரவிட்டதை தொடர்ந்து பதாகைகள் அகற்றப்பட்டது.


திருப்பூர்: உடுமலை நகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தேர்த்திருவிழாவையொட்டி குட்டை திடல், தளி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையில் நெருக்கமாக அமைக்கப்பட்ட இந்த விளம்பரப் பதாகைகளால் விபத்துகள் ஏற்படும் நிலை இருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் ஏற்கனவே உள்ள நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, அனைத்து விளம்பரப் பதாகைகளையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.



இதனையடுத்து விளம்பரப் பதாகைகளை தாங்களாகவே முன் வந்து அகற்றினர்.

இதுகுறித்து விளம்பரப் பதாகை அமைப்பாளர்கள் கூறுகையில், திருவிழா போன்ற முக்கிய நாட்களில் தான் ஓரளவு வருவாய் ஈட்ட முடியும். முழுமையாக அனைத்து பதாகைகளையும் அகற்றக் கூறியதால் பல நிறுவனங்களிடம் பணம் பெற முடியாத நிலை ஏற்படும். இதனால் கடும் இழப்பை சந்தித்துள்ளோம். குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவுகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாதுகாப்பான முறையில் விளம்பரப் பதாகைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...