உடுமலை அருகே உச்சிமாரியம்மன் கோவில் திருவிழா - பக்தர்கள் பங்கேற்பு!

உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற உச்சிமாரியம்மன், மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 31ஆம் தேதி தொடங்கிய விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.


திருப்பூர்: உடுமலை அருகே உச்சிமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற உச்சிமாரியம்மன், மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது.

உச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28-ந்தேதி கம்பம் நடுதல் மற்றும் சக்தி பூஜை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.



கடந்த 31-ந் தேதி சோமவாரப்பட்டி விநாயகர் கோவிலிலிருந்து திருமூர்த்தி மலைக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.



சோமவாரப்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு வளர்த்துக் கொண்டு செல்லுதல் நிகழ்ச்சியும் இரவு பொதுமக்கள் பரிவட்டத்துடன் கோவிலுக்கு வருகை தந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், மாகாளியம்மனுக்கு சக்தி கும்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் காலை அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் வானவேடிக்கையும் நடைபெறுகிறது.

இரவு கம்பம் பிடுங்கி கங்கையில் விடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், அபிஷேகம், பூஜையும் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி, எஸ் அம்மாபட்டி, பொட்டிநாயக்கனூர், ரத்தினம்மாள் நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...