சூலூர் அருகே குழந்தைகள், பெண்கள் பங்கேற்ற கும்மியாட்டம் - பார்வையாளர்கள் உற்சாகம்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே தாளக்கரை துர்க்கை அம்மன் கோயிலில், குடும்ப வாழ்வியல் எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பஞ்சபாண்டவர் கதையை பாடலாக பாடி நடைபெற்ற கும்மியாட்டத்தில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே தாளக்கரை கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு, 20வது ஆண்டு பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது.

பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் கும்மியாட்டம் நடைபெற்றது.



கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையில் ஒன்றான கும்மி ஆட்டத்தில் பெண்கள் குழந்தைகள் சிறுவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குடும்ப வாழ்வியல் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்கும் வகையில், பஞ்சபாண்டவர்கள் கதையை பாடலாக பாடி அவர்கள் கும்மியடித்தனர்.



குழந்தைகளே கும்மி பாடல்களை அழகு கொங்கு தமிழில் பாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரே சீருடையில் கும்மி பாடலுக்கு ஏற்ப, அவர்கள் கைகளை தட்டி கும்மி ஆட்டத்தை ஆடி சிறப்பித்தனர்.



இதுகுறித்து பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் ஆசிரியர் நாகராஜ் கூறுகையில், பாரம்பரிய கலையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும் பொதுமக்களிடையே கும்மியாட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 50க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு சென்று 2000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கும்மி ஆட்டத்தை இலவசமாக கற்பித்து வருகிறேன்.

இன்றைய கால குழந்தைகள், மாணவர்களை, செல்போன், தொலைக்காட்சி மோகங்களில் இருந்து வெளியே கொண்டுவரும் நோக்கத்தோடும் மனதையும் உடலையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த கும்மியாட்ட கலையை தொடர்ந்து கற்பிப்போம், என்றார்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...