பல்லடம் அருகே தென்னை கன்றுகளுக்கு ஆசிட் ஊற்றிய விவகாரம் - அதிகாரிகள் ஆய்வு

பல்லடம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் 40 தென்னை மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய விவகாரம் தொடர்பாக மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ஆசிப் ஊற்றியவர்களை விரைவில் கைது செய்யக்கோரி விவசாயி வலியுறுத்தினார்.


திருப்பூர்: புதுப்பாளையம் ஊராட்சியில் ஆசிட் ஊற்றிய தென்னை மரங்களை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் வசித்து வருபவர் ஜெகநாதன் என்பவரது மகன் கவின் குமார்.

இவர் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் சுமார் 300 தென்னங்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார். கவின் குமார் என்பவருக்கும், அவரது பக்கத்து தோட்டத்துக்காரர் சுப்பிரமணியன் என்பவருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இப்பிரச்சினை குறித்து கவின் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு அதிகாலையில் கவின்குமார் தனது தோட்டத்திற்கு சென்று பார்த்த போது 40 தென்னங்கன்றுகளின் குருத்தில் ஆசிட் மற்றும் களைக்கொல்லி மருந்தினை கலந்து மர்ம நபர்கள் ஊற்றியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.



40 தென்னங்கன்றுகளும் முழுவதுமாக கருகி காய்ந்துள்ளதால் தென்னங்கன்றுகள் மீது ஆசிட் ஊற்றியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு 40 தென்னங்கன்றுகளுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டஈடு பெற்று தரக் கோரியும், கவின்குமாரின்,பக்கத்து தோட்டத்துக்காரர் சுப்பிரமணியன் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாகவும், அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் கவின் குமார் புகார் அளித்துள்ளார்.



இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் மற்றும் பொங்கலூர் வட்டார வேளாண் அலுவலர் ஆகியோர் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தென்னை மரங்களை மீண்டும் உயிர்பிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கான ஆலோசனைகளை விவசாயிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தென்னை மரத்தில் ஊற்றப்பட்டுள்ளது ஆசிட்டா? அல்லது களைக்கொல்லி மருந்தா? என்பது குறித்து எந்த ஆய்வும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை எனவும் வருவாய் துறை சார்பில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை எனவும் தென்னை மரங்களை அழித்தவர்கள் மீது நான்கு நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட விவசாயி கவின்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...