பல்லடம் அருகே தென்னை கன்றுகளுக்கு ஆசிட் ஊற்றிய விவகாரம் - அதிகாரிகள் ஆய்வு

பல்லடம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் 40 தென்னை மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய விவகாரம் தொடர்பாக மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ஆசிப் ஊற்றியவர்களை விரைவில் கைது செய்யக்கோரி விவசாயி வலியுறுத்தினார்.


திருப்பூர்: புதுப்பாளையம் ஊராட்சியில் ஆசிட் ஊற்றிய தென்னை மரங்களை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் வசித்து வருபவர் ஜெகநாதன் என்பவரது மகன் கவின் குமார்.

இவர் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் சுமார் 300 தென்னங்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார். கவின் குமார் என்பவருக்கும், அவரது பக்கத்து தோட்டத்துக்காரர் சுப்பிரமணியன் என்பவருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இப்பிரச்சினை குறித்து கவின் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு அதிகாலையில் கவின்குமார் தனது தோட்டத்திற்கு சென்று பார்த்த போது 40 தென்னங்கன்றுகளின் குருத்தில் ஆசிட் மற்றும் களைக்கொல்லி மருந்தினை கலந்து மர்ம நபர்கள் ஊற்றியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.



40 தென்னங்கன்றுகளும் முழுவதுமாக கருகி காய்ந்துள்ளதால் தென்னங்கன்றுகள் மீது ஆசிட் ஊற்றியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு 40 தென்னங்கன்றுகளுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டஈடு பெற்று தரக் கோரியும், கவின்குமாரின்,பக்கத்து தோட்டத்துக்காரர் சுப்பிரமணியன் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாகவும், அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் கவின் குமார் புகார் அளித்துள்ளார்.



இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் மற்றும் பொங்கலூர் வட்டார வேளாண் அலுவலர் ஆகியோர் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தென்னை மரங்களை மீண்டும் உயிர்பிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கான ஆலோசனைகளை விவசாயிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தென்னை மரத்தில் ஊற்றப்பட்டுள்ளது ஆசிட்டா? அல்லது களைக்கொல்லி மருந்தா? என்பது குறித்து எந்த ஆய்வும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை எனவும் வருவாய் துறை சார்பில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை எனவும் தென்னை மரங்களை அழித்தவர்கள் மீது நான்கு நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட விவசாயி கவின்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...