கோவை ஜி.என்.மில்ஸ் அருகே கேரள லாட்டரி விற்பனை - இருவர் கைது!

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்த அலெக்சாண்டர் மற்றும் கணேசன் ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5420 பணம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் ஜி.என்.மில்ஸ் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருவதாக துடியலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் துடியலூர் காவல் உதவி ஆவாளர் பழனியாண்டி தலைமையிலான காவலர்கள் ஜி.என்.மில்ஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக்கொண்டு இருந்த சுப்பிரமணியம் பாளையத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் மற்றும் கணேசன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த துடியலூர் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.5,420 பணம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...