தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!

தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் அதிகாரிகள், மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுடன், கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் பணியின் போது கடை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, டீக்கடை, பழக்கடை, செருப்பு கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.

தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு தினசரி சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் உட்காருவதற்கு கூட இடமில்லாமல் ஆங்காங்கே கடும் வெயிலிலும் நின்றபடியே பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் இருந்து வருகிறது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தனர்.



அதன் அடிப்படையில் இன்று அதிரடியாக தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் ராமர் முன்னிலையில், தாராபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர்.



அப்போது அங்கு ஒரு சில கடை உரிமையாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...