கோவையில் குற்றச் செயல்களைத் தடுக்க நடவடிக்கை - கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தம்

கோவை திருமலைநாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட 11 கண்காணிப்பு கேமிராக்களை பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் பெரியநாயக்கன்பாளையம் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் பல்வேறு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்களை அமைத்து வருகின்றனர்.



அதன் இயக்கங்கள் அனைத்து பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட திருமலை நாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் ஜோதிபுரத்தைச் சேர்ந்த சுபா பிளாஸ்டிக் என்ற தனியார் நிறுவனம் 1.5 லட்சம் செலவில் 11 கண்காணிப்பு கேமிராக்களை அமைத்துக் கொடுத்துள்ளனர்.



இதன் தொடக்க விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் கலந்து கொண்டு 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.



அப்போது, கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்துக் கொடுத்த சுபா பிளாஸ்டிக்ஸ் நிறுவன உரிமையாளர் பாஸ்கரன் மற்றும் அதற்கு உதவியவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



நிகழ்ச்சியில் பேசிய துணை காவல் கண்காணிப்பாளர், குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல லட்சம் மதிப்பில் வீடுகளை கட்டுவோர் சில ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...