கோவையில் குற்றச் செயல்களைத் தடுக்க நடவடிக்கை - கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தம்

கோவை திருமலைநாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட 11 கண்காணிப்பு கேமிராக்களை பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் பெரியநாயக்கன்பாளையம் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் பல்வேறு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்களை அமைத்து வருகின்றனர்.



அதன் இயக்கங்கள் அனைத்து பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட திருமலை நாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் ஜோதிபுரத்தைச் சேர்ந்த சுபா பிளாஸ்டிக் என்ற தனியார் நிறுவனம் 1.5 லட்சம் செலவில் 11 கண்காணிப்பு கேமிராக்களை அமைத்துக் கொடுத்துள்ளனர்.



இதன் தொடக்க விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் கலந்து கொண்டு 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.



அப்போது, கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்துக் கொடுத்த சுபா பிளாஸ்டிக்ஸ் நிறுவன உரிமையாளர் பாஸ்கரன் மற்றும் அதற்கு உதவியவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



நிகழ்ச்சியில் பேசிய துணை காவல் கண்காணிப்பாளர், குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல லட்சம் மதிப்பில் வீடுகளை கட்டுவோர் சில ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...