கோவை- பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்தால் ஈச்சனாரி கோவில் பாதிக்கப்படாது என பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளுக்காக மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ஓதுக்கி இருப்பதாகவும் , இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து பேச இருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

பொள்ளாச்சி இடையேயான 4 வழிச்சாலை  அமைக்கப்பட்டு வரும் பகுதிகளை  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியால் பாதிக்கப்படாது எனவும்  சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் மேம்பாலம் அமைக்கப்பட்டு கோவிலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும் நெடுஞ்சாலை அமைக்கும் போதே சாலையின் இரு பகுதிகளிலும் செடிகள் அமைப்பது, மரங்கள் நடுவது போன்ற  சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் , பொள்ளாச்சி  கோவை மக்கள் நகரங்களை காப்பதில் ஆர்வத்துடன் இருப்பதால்  4 வழிச்சாலை பிரமாதமாக அமையும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தின் சாலை மேம்பாடு மற்றும் விரிவாக்க பணிகளுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு ஓதுக்கி இருப்பதாகவும் குறிப்பாக  கிழக்கு கடற்கரை சாலைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளதாகவும் , தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து கிழக்கு கடற்கரை சாலை விர்வாக்க பணிகள் தொடர்பாக பேச இருப்பதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படும் போது மிக முக்கியமாக பொருளாதார சாலையாக உருவெடுக்கும் எனவும், புறந்தள்ளப்பட்ட  கிழக்கு மாவட்ட மக்கள்  வசிக்கும் பகுதிகளில் இதன் மூலம் புதிய தொழில்கள் உருவாகி அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி கொடுக்கும்  எனவும் பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தற்போதைய முதல்வர் சாலை போக்குவரத்து துறையில் இருந்ததால் இந்த சாலை அமைவதன் பலன்கள் தெரியும் எனவும், இந்த திட்டத்திற்கு மாநில அரசு ஓத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு புறந்தள்ளுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...