கோவை துடியலூரில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் - இளைஞர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் வினோத்குமார் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக துடியலூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, துடியலூர் ஆய்வாளர் ஞானசேகரன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் கவுண்டம்பாளையம் எஸ்.கே.ஆர்.பார்க் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் வினோத்குமார் என்பதும் அதே பகுதியில் வசித்து வருவதும், இவர் ஆந்திர மாநிலம் குச்சிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை இரயில் மூலம் கடத்தி வந்து கவுண்டம்பாளையம் பகுதியில் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்ததும்.

இதைத் தொடர்ந்து, வினோத்குமாரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 65 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். துடியலூர் காவல் நிலையத்தில் வினோத்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...