நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை - பிரதமர் வருகையையொட்டி முன்னேற்பாடு!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு வரும் 9ஆம் தேதி பிரதமர் மோடி வருகிறார். அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு உணவு அளிப்பதுடன், மூத்த பழங்குடியின யானை பாகன்களை சந்திக்கிறார்.


நீலகிரி: நாட்டில் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக 9-ந் தேதி காலை 7:15 மணியளவில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வருகை தருகிறார்.



அங்கு வாகன சவாரி செல்லும் பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக 9.35 மணிக்கு முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு வருகிறார்.

அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு உணவு அளிப்பதுடன், மூத்த பழங்குடியின யானை பாகன்களை சந்தித்து காட்டு யானைகளை பிடிப்பது, அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அவர்களின் குறைகளையும் கேட்கிறார்.

பின்னர், டி 23 புலியை உயிருடன் பிடிக்க உதவிய 3 வேட்டை தடுப்பு காவலர்களையும் சந்தித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபன்ட் மிஸ்பரர் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரையும் அதில் இடம் பிடித்த ரகு மற்றும் பூமி ஆகிய யானை குட்டிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் சிறப்பாக செயல்பட்ட 12 புலிகள் காப்பகங்களின் கள இயக்குனர்கள் மற்றும் 8 முன் களப்பணியாளர்களை பிரதமர் கௌரவிக்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடிக்கு வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக மைசூர் செல்கிறார்.



பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில், நிகழ்ச்சியை முடித்தபின் பிரதமர் மோடி மசினகுடியிலிருந்து ராணுவ ஹெலிகேப்டர் மூலம் மைசூர் செல்லவுள்ளார். இதற்கான ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை இன்று நடைபெற்றது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...