கோவை சங்கனூர் ஓடை சீரமைப்பு - பணிகளை விரைந்து முடிக்க ஆணையர் உத்தரவு!

கோவையில் உள்ள சங்கனூர் ஓடையை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க 49 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது நடக்கும் பணிகளை ஆய்வு செய்த ஆணையர் மு.பிரதாப், விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Tiupur: கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சங்கனூர் ஓடையானது தடாகம், கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, கணேஷ்புரம், புலியகுளம், சிங்காநல்லூர் குளம் வழியாகப் பாய்ந்து நொய்யல் ஆற்றில் கலக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்புவரை நல்ல நீர் ஓடிக்கொண்டிருந்த இந்த ஓடை, தற்போது கழிவுநீர் கால்வாய்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், கோவை மாநகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், இந்த சங்கனூர் ஓடையை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.

இந்தப் பணிகளை மேற்கொள்ள 49 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து ஓடையின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும், சாலைகள் அமைக்கும் பணியும் நேற்று தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, இந்தப் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...