2024ல் ஜுப்லியன்ட் எக்ஸ்போ - கோவை ரேஸ்கோர்ஸில் முன்னோட்டம்!

கோவை கொடிசியா கண்காட்சி அரங்கில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள ஜுப்லியன்ட் எக்ஸ்போ- 2024 கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் தாஜ்விவான்டா ஓட்டலில் நடைபெற்றது.


கோவை: கோவையிலுள்ள ஜுப்லியன்ட் கோயமுத்துார் பவுன்டேசன் அமைப்பு, ஜுப்லியன்ட் கோயமுத்துார் 2024 வளர்ச்சிமிகு கொங்குநாடு என்ற தொழில்முனைவோர்களுக்கான உதவும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு சார்பில் ஜுப்லியன்ட் எக்ஸ்போ 2024 என்ற பிரம்மாண்ட கண்காட்சி மற்றும் மாநாடு கோவையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற 20 நாடுகளில் இக்கண்காட்சி குறி்த்த விழிப்புணர்வு ‘ரோட்ஷோ’நடத்தப்படுகிறது.

ஜவுளி, உணவு, தங்கநகை உற்பத்தி, கட்டுமானம், காகிதம், தகவல் தொழில் நுட்பம், ரயில்வே, தொலைதொடர்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை உள்ளிட்டவை அடங்கும். இதன் வாயிலாக கோவையில் புதிய பொருளாதார மண்டலங்கள் உருவாகும். தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வர்த்தக பூங்காக்கள் உருவாகும்.

இக்கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி 10 முதல் 12 வரை கோவை கொடிசியா கண்காட்சி அரங்கில் நடக்கிறது. இக்கண்காட்சியில் 300 நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கின்றன. 5,000 முதல் 8,000 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். சர்வதேச அளவில் 20 நாடுகளை சேர்ந்த 300 தொழில்துறையினர் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சியை ‘பேம்’தமிழ்நாடு மேலாண் இயக்குனர் சிகிதாமஸ் வைத்தியன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதில், ஜுப்லியன்ட் கோயமுத்துார் பவுன்டேசன் அமைப்பு தலைவர் அபுதாஹீர், இயக்குநர்கள் சதீஷ்குமார், சந்தோஷ், முகமதுநாசர், அருண், மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமுருகன், இந்திய தொழில் வர்த்தக சபை செயலாளர் அருணாசலம், கொடிசியா தலைவர் திருஞானம் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களும், தொழில் முனைவோர்களும் சர்வதேச பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...