அனைத்து மாவட்டங்களிலும் அரசு நர்சிங் பயிற்சி மையம் தொடங்கப்படும்..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று கோவையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை அருகே புதிதாக தொடங்கப்பட்ட தனியார் நர்சிங் கல்லூரியை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் ஏ.ஜே.கே.கல்லூரி குழும வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்ட ஏ.ஜே.கே.நர்சிங் கல்லூரி துவக்க விழா, கல்விக் குழுமங்களின் தலைவர் அஜீத்குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு புதிதாக துவங்கப்பட்ட நர்சிங் கல்லூரியை திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக முதல்வர் துவக்கி வைத்த இந்த கல்லூரியின் புதிய அங்கமான நர்சிங் கல்லூரியை துவக்கி வைப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், நர்சிங் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கூறினார்.

ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில், தமிழகத்திலிருந்து வரும் நர்சிங் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதற்கு காரணம் அன்னை தெரசாவின் தாயுள்ளம் மற்றும் சேவை மனப்பான்மையோடு தமிழக நர்சிங் கல்லூரிகள் மனிதாபிமான முன்னுரிமையில் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், விரைவில் அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது, இது குறித்து ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட சுகாதார துறை இயக்குனர் டாக்டர் அருணா, அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா, மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், மருத்துவர் கந்தசாமி, ஏ.ஜே.கே.கல்லூரி முதல்வர் பிருந்தா, ஊராட்சி துணை தலைவர் செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...