தரம் உயர்த்தப்பட்ட காங்கேயம் அரசு மருத்துவமனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதற்கான பெயர்ப் பலகையை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். மேலும், ரூ. 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரச மருத்துவமனை சமீபத்தில் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.



இதனை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை பெயர் பலகையை திறந்து வைத்தார்.



மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதால், ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை அப்போது நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, காங்கேயம் வட்டம் சாவடிப்பாளையத்தில் 48 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தையும், அவிநாசி ஊராட்சிக்கு உட்பட்ட நம்பியம்பாளையம் 30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் தாயம் பாளையம் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் என மொத்தம் 1.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியின்போது மாநில செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...