உடுமலை - தளி சாலையில் போக்குவரத்து நெரிசல்: தீர்வு காணப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

உடுமலை - தளி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் அதன் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்தது போன்று ஒரு வழி பாதையாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை - தளி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தளி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வரும் நிலையில், அதற்கு தீர்வு காணப்படுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தளி சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையை திருமூர்த்தி மலை, அமராவதி, மூணாறுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக எந்த நேரமும் முக்கிய சாலையான தளி சாலை வாகன நெருக்கத்துடன் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.



இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது,

உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் தளி சாலையின் பங்கு முக்கியமானதாகும். இதன் வழியாக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையின் குறுக்காக செல்கின்ற ரயில் பாதையின் மீது கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது.

அதற்கு முன்பு தளி சாலை ஒரு வழிப்பாதையாக இருந்தது. அப்போது பேருந்து நிலையம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வருகின்ற வாகனங்கள் ராஜேந்திரா சாலை வழியாக சென்று காந்தி சதுக்கத்தை அடைந்து திருமூர்த்தி மலை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு சென்று விடும்.

அதே போன்று நகருக்குள் நுழையும் வாகனங்கள் தளி சாலை வழியாக வந்து பொள்ளாச்சி - பழனி நெடுஞ்சாலையை அடைந்து பேருந்து நிலையத்துக்கு சென்று விடும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீராக இருந்து வந்தது. ஆனால் பாலம் கட்டப்பட்ட பின்பு ஒரு வழி சாலையாக இருந்த தளி சாலை இரு வழி சாலையாக மாறிவிட்டது.

வாகன பெருக்கமும் அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அதை செயல்படுத்த முன்வரவில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தளி சாலையில் ஏற்பட்டு வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு தரும் வகையில் அதன் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அத்துடன் முன்பு இருந்தது போன்று ஒரு வழி பாதையாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கரூர் 41 உயிரிழந்தோருக்கு அரசு வேலை: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...