தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் தமிழ் - பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் தகவல்!

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் தமிழ் இணைப்பு 24 மணி நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். ஹிந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் மட்டுமே இயங்கி வந்த இணையதளத்தில் 7வது மொழியாக தமிழும் இணைக்கப்பட்டுள்ளது.


கோவை: மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் விண்ணப்பம் மற்றும் இணையதளங்களில் தமிழ் மொழியையும் இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், அது நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்பி சண்முக சுந்தரம் கூறியதாவது:

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் விண்ணப்பம் மற்றும் இணையதளங்களில் தமிழ் மொழியை தவிர்த்து ஹிந்தி, மலையாளம், கன்னடா உள்ளிட்ட 6 மொழிகள் மட்டும் இடம்பெற்றிருந்தன.

இதனால், தமிழக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், தமிழ் மொழியை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஏப்ரல் 5-ம் தேதி தென்னை வளர்ச்சி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு நான் கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தேன்.

இதை தொடர்ந்து, 24 மணி நேரத்தில் தமிழ் மொழியை தென்னை வளர்ச்சி வாரியத்தின் இணையதளத்தில் மத்திய அரசு இணைத்துள்ளது. இந்நடவடிக்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...