தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் தமிழ் - பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் தகவல்!

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் தமிழ் இணைப்பு 24 மணி நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். ஹிந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் மட்டுமே இயங்கி வந்த இணையதளத்தில் 7வது மொழியாக தமிழும் இணைக்கப்பட்டுள்ளது.


கோவை: மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் விண்ணப்பம் மற்றும் இணையதளங்களில் தமிழ் மொழியையும் இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், அது நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்பி சண்முக சுந்தரம் கூறியதாவது:

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் விண்ணப்பம் மற்றும் இணையதளங்களில் தமிழ் மொழியை தவிர்த்து ஹிந்தி, மலையாளம், கன்னடா உள்ளிட்ட 6 மொழிகள் மட்டும் இடம்பெற்றிருந்தன.

இதனால், தமிழக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், தமிழ் மொழியை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஏப்ரல் 5-ம் தேதி தென்னை வளர்ச்சி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு நான் கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தேன்.

இதை தொடர்ந்து, 24 மணி நேரத்தில் தமிழ் மொழியை தென்னை வளர்ச்சி வாரியத்தின் இணையதளத்தில் மத்திய அரசு இணைத்துள்ளது. இந்நடவடிக்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...