உடுமலை பைபாஸில் இணைப்பு சாலை துண்டிப்பு - வாகன ஓட்டிகள் அவதி!

உடுமலையில், பிரதான சாலைகளை இணைக்கும் பகுதியில், மழை நீர் வடிகால் பணிக்காக பாலம் இடிக்கப்பட்டு தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்படாமல் 7 மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்ட பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிறுத்தம் அருகே, பொள்ளாச்சி சாலையையும், பைபாஸ் சாலையையும் இணைக்கும் வகையில், சாலை அமைக்கப்பட்டுள்ளது. பழனிசாலை, பொள்ளாச்சி சாலையில் வரும் வாகனங்கள் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனைக்கு செல்லும் பேருந்துகளுக்கு பிரதான வழித்தடமாக இருந்தது.

கடந்த, ஏழு மாதத்திற்கு முன், இப்பகுதியில் மழை நீர் வடிகால் துார்வாரும் பணியின் போது, மழை நீர் வடிகால் மீதிருந்த பாலம் அகற்றப்பட்டதோடு, மழை நீர் வடிகாலும் இடிக்கப்பட்டது. இதனால் பைபாஸ் சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை இணைக்கும் வழித்தடம் துண்டிக்கப்பட்டது.



அதற்கு பின், கட்டட கழிவுகள் அகற்றப்படாமலும், மழை நீர் வடிகால் பாலம் கட்டப்படாமலும் உள்ளது. இதனால், இரு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.



கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட இவ்வழியாக வந்த வாலிபர் ஓருவர் மழைநீர் வடிகாலுக்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து காயம் அடைந்தார். எனவே, நகராட்சி அதிகாரிகள், கட்டட கழிவுகளை அகற்றி, பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...