கோவையில் பயணிகள் ஏறி இறங்க டவுன் பேருந்துகளில் நிறுத்தங்களை அறிவிக்கும் ஆடியோ கருவி!

கோவையில் இயக்கப்பட்டு வரும் டவுன் பேருந்துகளில் நடத்துனர்களின் வேலைப்பளுவை குறைக்கும் விதமாகவும், பயணிகளின் வசதிக்காகவும் சோதனை முயற்சிக்காக நிறுத்தங்களை அறிவிக்கும் ஆடியோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இயக்கப்பட்டு வரும் டவுன் பேருந்துகளில் சோதனை முயற்சிக்காக நிறுத்தங்களை அறிவிக்கும் ஆடியோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

கோவையில் 675 டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பேருந்துகள் தாழ்தள சொகுசு பேருந்துகளாகும்.

இந்த பேருந்துகளில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். வழக்கமாக பேருந்துகளில் பயணிகள் ஏறவும், பயணிகள் பேருந்தை விட்டு இறங்கும் பொழுதும் நடத்துனர்கள் விசில் ஊதுவார்கள்.



நடத்துனர் விசில் ஊதியவுடன் பேருந்தை ஓட்டுனர் நிறுத்தி விடுவார். அதன் பின்னர் பயணிகள் இறங்குவதும், ஏறுவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காவும், நடத்துனர்களின் வேலைப்பளுவை குறைக்கவும், டவுன் பேருந்துகளில் தானியங்கி அறிவிப்பு ஆடியோ கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த தானியங்கி அறிவிப்பு ஆடியோ கருவி கோவையில் இயங்கும் டவுன் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி பேருந்து நிறுத்தம் நெருங்கும் போது, பேருந்து நிறுத்தத்தின் பெயரை அறிவிக்கிறது.



பேருந்து புறப்பட்டவுடன், அடுத்து வரும் பேருந்து நிறுத்தத்தின் பெயரை அறிவித்து இறங்கும் பயணிகளை தயார்படுத்துகிறது. இதனால் நடத்துனரின் விசிலுக்கு வேலை இல்லை.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஓடும் டவுன் பேருந்துகளில் இந்த ஆடியோ அறிவிப்பு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கோவையில் 35 டவுன் பேருந்துகளில் சோதனை முறையில் பொருத்தி இருக்கிறோம். பயணிகளுக்கு இந்த கருவி எந்தளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு மேலும் அதிகரிக்கப்படும், என்றனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...