கோவையில் பயணிகள் ஏறி இறங்க டவுன் பேருந்துகளில் நிறுத்தங்களை அறிவிக்கும் ஆடியோ கருவி!

கோவையில் இயக்கப்பட்டு வரும் டவுன் பேருந்துகளில் நடத்துனர்களின் வேலைப்பளுவை குறைக்கும் விதமாகவும், பயணிகளின் வசதிக்காகவும் சோதனை முயற்சிக்காக நிறுத்தங்களை அறிவிக்கும் ஆடியோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இயக்கப்பட்டு வரும் டவுன் பேருந்துகளில் சோதனை முயற்சிக்காக நிறுத்தங்களை அறிவிக்கும் ஆடியோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

கோவையில் 675 டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பேருந்துகள் தாழ்தள சொகுசு பேருந்துகளாகும்.

இந்த பேருந்துகளில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். வழக்கமாக பேருந்துகளில் பயணிகள் ஏறவும், பயணிகள் பேருந்தை விட்டு இறங்கும் பொழுதும் நடத்துனர்கள் விசில் ஊதுவார்கள்.



நடத்துனர் விசில் ஊதியவுடன் பேருந்தை ஓட்டுனர் நிறுத்தி விடுவார். அதன் பின்னர் பயணிகள் இறங்குவதும், ஏறுவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காவும், நடத்துனர்களின் வேலைப்பளுவை குறைக்கவும், டவுன் பேருந்துகளில் தானியங்கி அறிவிப்பு ஆடியோ கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த தானியங்கி அறிவிப்பு ஆடியோ கருவி கோவையில் இயங்கும் டவுன் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி பேருந்து நிறுத்தம் நெருங்கும் போது, பேருந்து நிறுத்தத்தின் பெயரை அறிவிக்கிறது.



பேருந்து புறப்பட்டவுடன், அடுத்து வரும் பேருந்து நிறுத்தத்தின் பெயரை அறிவித்து இறங்கும் பயணிகளை தயார்படுத்துகிறது. இதனால் நடத்துனரின் விசிலுக்கு வேலை இல்லை.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஓடும் டவுன் பேருந்துகளில் இந்த ஆடியோ அறிவிப்பு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கோவையில் 35 டவுன் பேருந்துகளில் சோதனை முறையில் பொருத்தி இருக்கிறோம். பயணிகளுக்கு இந்த கருவி எந்தளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு மேலும் அதிகரிக்கப்படும், என்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...