உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம் என்பவரின் வீட்டில் நுழைந்து, 6 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து உடுமலை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூலாங்கிணறு பகுதியைச் சேர்ந்த அய்யாவு என்பவரது மகன் பஞ்சலிங்கம் (வயது 58). மில் தொழிலாளி. இவருடைய மனைவி பாலக்காட்டிலுள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் பஞ்சலிங்கம் தனியாக வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று இரவுப் பணிக்காக இரவு 9.30 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு மில்லுக்கு சென்றார்.

பின்னர் வேலை முடிந்து மறுநாள் காலை 6 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவில் இருந்த தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதனால் பதற்றமடைந்த பஞ்சலிங்கம், உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அறையில் சிதறிக்கிடந்தன.

மேலும், பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த பஞ்சலிங்கம், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவம் குறித்து பஞ்சலிங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த உடுமலை போலீசார் மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். மேலும் அந்த பகுதிக்கு அருகில் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் புதிய நபர்கள் நடமாட்டம் ஆகியவை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...