அரசு விழாக்களில் கும்மியாட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்..! - கலைஞர்கள் கோரிக்கை

கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தினை கற்றுக் கொள்வதால் மனமும் உடலும் ஒருசேர கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. கும்மியாட்டக் கலை என்பது போர் பொக்கிஷம். தமிழ்நாடு அரசின் பாரம்பரிய கலைகள் பட்டியலில் கும்மியாட்டம் 70 வது இடத்தில் உள்ளதாக மங்கை வள்ளி கும்மி ஆட்ட குழுவினர் தெரிவித்தனர்.



பல்லடம்: அரசு விழாக்களில் கும்மியாட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கும்மியாட்ட கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் இன்று மங்கை வள்ளி கும்மி ஆட்ட குழுவினரின் 54ஆவது அரங்கேற்ற விழா நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள்,ஆண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் ஒரே சீருடையில் கும்மியடித்து மகிழ்ந்தனர்.



முருகப்பெருமான் வள்ளியை எப்படி மணம் முடித்தார் என்ற கதையினை 30 பாடங்களாக பிரித்து நான்கு மணி நேரம் பாடலாக படித்து அவர்கள் கும்மிடியத்து நடனமாடினர். ஒரே சீருடையில் 300-க்கும் மேற்பட்டோரின் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தினை கற்றுக் கொள்வதால் மனமும் உடலும் ஒருசேர கட்டுப்பாட்டுடன் இருப்பதாகக் கூறிய கும்மியாட்டக் குழுவினர், கும்மியாட்டக் கலை என்பது போர் பொக்கிஷம் எனவும் தமிழ்நாடு அரசின் பாரம்பரிய கலைகள் பட்டியலில் கும்மியாட்டம் 70 வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற அரசு விழாக்களில் நடைபெறும் அணிவகுப்புகளில் கும்மி ஆட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கும்மியாட்ட குழுவினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...