கங்கையில் புனித நீராடிய எம்எல்ஏ வானதி சீனிவாசன் - மக்கள் நலனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை!

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்குப் பிறகு உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பாஜக மகளிரணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், ரிஷிகேஷியில் உள்ள கங்கை நதியில் நீராடிய புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து அனைவரின் நலனுக்காக பிரார்த்தித்ததாக பதிவிட்டுள்ளார்.


கோவை: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் புனித நீராடிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சட்டமன்றம் முதல் கட்சி நிகழ்ச்சிகள் வரை விறுவிறுப்பாக இயங்கி வருபவர் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு பிறகு ஆன்மிக தலமான உத்தரகண்ட் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி , கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் இந்து குருக்களை சந்தித்து அவர்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து ரிஷிகேஷில் உள்ள கங்கை நதி கரையில் புனித நீராடி அந்த புகைப்படங்களை வானதி சீனிவாசன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், மக்களின் நன்மைக்காக பிரார்த்தித்துக் கொண்டதாக வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

இந்துக்களின் புனித நதியாக திகழும் கங்கை நதியானது 2,525 கிலோமீட்டர் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை கரையில், ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பாட்னா, கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...