வால்பாறை அருகே இறந்தநிலையில் ஆண்யானை மீட்பு - உடற்கூறு ஆய்வில் புதிய தகவல்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனபகுதியில் இறந்த நிலையில் ஆண்யானையின் உடலை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கால்நடை மருத்துவர்கள் நடத்திய உடற்கூறு ஆய்வில், யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு பள்ளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே இறந்த நிலையில் ஆண் யானை மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேபூனாச்சி செட்டில்மென்ட் வன பகுதியில் ஆண் யானை இறந்து கிடந்தது. வனத்துறையினர் ரோந்து பணி சென்றபோது,யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இறந்து பல நாட்களான நிலையில் கிடந்த யானையின் உடலை,ஆனைமலை புலிகள் காப்பகம்கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் மருதுவ குலு, ACF செல்வன், வால்பாறை வனச்சரக அலுவலர்அகியோர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்தனர்.அப்போது, யானையின் தந்தம் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது.



உடற்கூறு ஆய்வின் அடிப்படையில், இறந்த யானை மற்றொரு யானையுடன் சண்டையிட்டு ஒரு பள்ளத்தில் விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யானை வேட்டையாடப்பட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்,இறந்த யானை சுமார் 37-42 வயது இருக்கும் என்றும்,உடற்கூறு ஆய்வு முடிந்து சடலம் இயற்கையான சிதைவுக்காகவும் (decompose), மற்ற உயிரினங்களுக்கு உணவாகும் வகையில்விடப்படுவதாகவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...