பல்லடம் அருகே விவசாய தோட்டத்தில் 20 மரங்களை வெட்டிய மின்வாரிய ஊழியர்கள் - விவசாயி புகார்!

பல்லடம் அருகே அய்யம்பாளையத்தில் விவசாய தோட்டத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி வீழ்த்திய மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் காவல் நிலையத்தில் விவசாயி புகார் அளித்துள்ளார்.



திருப்பூர்: பல்லடம் அருகே விவசாய தோட்டத்தில் இருந்த 20 மரங்களை வெட்டிய மின்வாரிய ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பையகவுண்டர் என்பவரது மகன் வேலுச்சாமி. விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 1.75 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், மழை பொய்த்துப் போனதால் தற்போது தரிசு நிலமாக உள்ளது.



இந்த நிலையில் வேலுச்சாமி குடும்பத்துடன் காளி வேலம்பட்டியில் வசித்து வரும் நிலையில் 10 நாட்களுக்கு ஒரு முறை தனது தோட்டத்திற்கு சென்று வருவது வழக்கம். இதனிடையே, இன்று வேலுச்சாமி தனது தோட்டத்திற்கு சென்று பார்த்த போது வேப்பமரம், வெள்ளவேலாம்மரம், கிளுவை மரம் போன்ற 20 மரங்களை மர்மநபர்கள் வெட்டியது தெரியவந்தது.

இந்நிலையில் அருகில் மின் ஒயர்கள் செல்வதால் சந்தேகத்தில் அய்யம்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலக அதிகாரிகளை விவசாயி வேலுச்சாமி நாடியுள்ளார்.



இதுகுறித்து அதிகாரிகளிடம் வேலுச்சாமி கேட்டபோது "உங்களது பக்கத்து தோட்டத்துக்காரர் மோகன் என்பவர்தான் மரங்களை வெட்ட சொன்னார் என அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.



எனவே மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி வேலுச்சாமி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் ஆசையாக வளர்த்த மரங்களை இது போன்று வெட்டி வீழ்த்தினால் சாதாரண விவசாயி என்ன செய்ய முடியும். மழை பொய்த்துப் போனதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால் தரிசு நிலத்தில் மரங்களை வளர்த்தால் இதுபோன்று குட்டச் சம்பவங்களில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயி வேலுச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...