கோவை அருகே மதுபோதையில் சாலையிலேயே படுத்து உறங்கிய பெண் - போக்குவரத்து பாதிப்பு!

பொள்ளாச்சி - கோவை சாலையில் பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போதையில் நடுரோட்டிலேயே படுத்து உறங்கிய நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பின் அவரை எழுப்பி அனுப்பி வைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் பெண் ஒருவர் மதுபோதையில் நடுரோட்டிலேயே படுத்து உறங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி - கோவை சாலை பகுதியில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இந்நிலையில், போக்குவரத்தை சரி செய்ய காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு மதுபோதையில் சாலையின் நடுவே படுத்து உறங்கியுள்ளார்.

தொடர்ந்து, அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் அந்த பெண்ணிடம் நீண்ட நேரம் பேசி அப்பகுதியில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினர்.



ஆனால் மது போதை தலைக்கு ஏறிய நிலையில் அங்கிருந்த போலீசாரை கேலி, கிண்டல் செய்ததுடன் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அந்த பெண் ஈடுபட்டார்.



போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருந்த வாகனங்களை சைகை முறையில் கை அசைத்து சிறிது நேரம் போக்குவரத்து பணியை செய்தார். பின்பு நீண்ட நேரம் போராடிய போலீசார் அந்த பெண்ணை அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...