கோவையில் 36 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு


கோவையில் கடந்த சில வாரங்களாக பன்றிக்காய்ச்சல் பரவிவருகிறது. மேலும், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி பகுதியில் மர்மகாய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை சிகிச்சை பெற வந்தோர்களில் இதுவரை 36 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ சவுந்திர் வேலி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது:-  

கோவை மட்டுமின்றி திருப்பூர் ,ஈரோடு ,நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலரும் தங்களுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருக்கலாம் என்ற பீதியில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன்  36 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்  8 பேருக்கு பன்றி காய்ச்சல் இருபது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 28 பேரில் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அறிகுறிகள் இருந்தாலே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது.

மேலும், அவர்களுக்கு தனி அறையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்ப்ட்டு 3 பேர் சிகிச்சைக்கை பெற்று வருகின்றனர். சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக மக்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். முறையான சிகிச்சை பெறாமல் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். உடனடி சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழப்பு நேரலாம். பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான போதிய அளவிலான மருந்து அரசு மருத்துவமனையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...