மோடியின் ஈஷா வருகையை எதிர்த்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பைச் சேர்தோர் கோவையில் கைது

நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தை கண்டும்காணாமல் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், வன ஆக்கிரமிப்பு அமைப்பான ஈஷாவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமரை கண்டித்தும் கோவையில் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



பவானி ஆறு தடுப்பணை தடுப்பு போராட்டக் குழுவின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்மாநில காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட 11  அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மோடியை கண்டித்தும், மத்திய அரசின் தமிழக விரோத செயல்களைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



தொடர்ந்து திடீரென ஆர்பாட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதின் மூலம் மத்திய அரசு தமிழகத்திடம் பாராமுகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், பிரதமர் கலந்து கொள்ளும் ஈஷா விழாவிற்காக வன விலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டிருப்பதின் மூலம் அங்கு விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பது உறுதியாவதாகவும் தெரிவித்தார். 

இத்தகைய சட்ட அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஈஷாவின் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வதை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்படுவதாகவும் கு.ராமகிருட்டிணன் அப்போது தெரிவித்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...