மே 15-க்குள் சட்ட விரோத பார்களை மூட வேண்டும்..! - கோவையில் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

கோவை குனியமுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக இயங்கும் பார்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மூட வேண்டும். இல்லை என்றால் நாங்கள் மூடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் பார்களை முழுவதுமாக மூட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

தமிழக ஆளுநர் நேற்று ஆன்லைன் ரம்மிதடைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

எனவே ஆன்லைன் ரம்மியால் சொத்துக்களை இழந்தார்கள். உயிர்களை இழந்தார்கள் போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது.

டாஸ்மாக் மூலம் தான் அனைத்து விதமான சமூக கேடுகள் நடைபெறுகிறது. டாஸ்மாக் கடைகளை அறவே மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரை குறிவைத்து தாக்கும் போக்கு உள்ளது.

ஆளுநர் என்பவர் குடியரசு தலைவரால், நியமிக்கப்படுபவர். அரசியல் திட்டங்களுக்கு செயல் கொடுப்பவர்கள் ஆளுநர்கள் தான். ஆளுநர் இல்லாமல் மாநில அரசை எண்ணிப் பார்க்க முடியாது.

மத்திய அரசுக்கு மாறான சட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதெல்லாம் அரசியல் சாசனத்தை புரியாமல் இருப்பவர்கள் பேசுவது. சட்டமன்றத்திற்குள் கைகட்டி சும்மா பார்க்க மாட்டோம் என முதலமைச்சர் கூறுவது எல்லாம் ஆபத்தானது.

2021 வரையில் மோடியை இலக்காக வைத்து மோடி வந்த போது கருப்பு பலூன் பறந்தது. ஆனால் தற்போது அதனை நிறுத்தி விட்டு சரண் அடைந்துவிட்டனர். குடும்பமே சென்று மோடியை கை தூக்கி நிற்பது இவர்கள் சங்கிகளாக மாறிவிட்டார்களா.?.

இது குறித்து இஸ்லாமிய கிறிஸ்துவ சகோதரர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இனிமேலும் திமுக போடும் நாடகத்தை நம்பாதீர்கள். உங்களோடு ரம்ஜான் மாதத்தில் தொப்பி போட்டு வருவார்கள் ஏமாந்து விட வேண்டாம்.

ஆளுநரை மிரட்டுவதை விட்டு விட வேண்டும். ஆளுநரை மிரட்டும் தமிழக அரசாங்கம் இருக்க வாய்ப்பே இல்லை. ரம்மிக்கும், மது பழக்கங்களுக்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும்.

பெண்களை விதவையாக்குவதை நிறுத்த வேண்டும். டாஸ்மாக்கை மூட ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை. டாஸ்மாக் கடைகளை போல பார்களில் சட்டவிரோதமாக மது விற்கப்படுகிறது.

எத்தனை சட்ட விரோத பார்கள் நடைபெறுகிறது என்பதை நிதித்துறை அமைச்சர் ஆய்வு செய்து சொல்ல வேண்டும். மேலும் மே 15க்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மூட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் மூடுவோம். 2வது டாஸ்மாக் பார்களை மூட போராட்டம் நடத்துவோம். 3வதாக மது தயாரிப்பு ஆலைகளை மூட போராட்டம் நடத்துவோம்.

சட்ட விரோத மது விற்பனையால் வரும் பணம் தனி நபர் கஜானாவிற்கு போகிறது. பல இடங்களில் சட்டவிரோத பார்கள் நடைபெறுகிறது. டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச உள்ளேன். மேலும் திமுக கூட்டணி கட்சிகளுடனும் பேச உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...